கண்மணியின் அம்மா இறந்து இன்றோடு நாலு வருஷம் ஆகிருச்சு.
ரெண்டு நாளுக்கு முன்னாடி தான் அப்பாவுக்கு வேற ஒருத்தங்கள கல்யாணம் பண்ணி வச்சாங்க.
விழியோரம் வழியும் கண்ணீரை துடைத்தபடி டைரியில் புது அம்மாவை நினைத்து எழுதினாள்,
“என்றாவது ஒரு நாள் நா ஓடி வந்து உன்னை கட்டி பிடித்து,
அது உனக்கு பிடிக்காமல் போனால்,
அப்டியே நின்று விடு, நான் புரிந்து கொண்டு விலகி விடுவேன்,
ஆனால் பிடிக்கவில்லை என்று என்னை கீழே தள்ளி விடாதே..”என்று .
tube light ஐ அணைக்காமல் டைரியை கட்டிக் கொண்டு தூங்கும் கண்மணியைப் பார்த்து அறையினுள் நுளைந்தாள் அவள்.
மிரண்ட கண்களோடு, கதவின் பின் ஒளிந்தபடி, தயங்கி தயங்கி தன்னை முதன் முதலில் கண்மணி பார்த்தது நினைவிற்கு வந்தது.
டைரியை மெள்ள அவள் அணைப்பில் இருந்து எடுத்து மேஜையில் வைத்துவிட்டு நெற்றியில் முத்தமிட்டு சென்றாள்.
ஏனோ தெரியவில்லை, தனை மறந்து தூக்கத்தில் சிரித்தபடி புரண்டு படுத்தாள், கண்மணி.
ஆழமான சுவாசத்தோடு அமைதியான ஒரு உறக்கத்திற்கு சென்று கொண்டு இருந்தாள்.
தூங்கட்டும் தூங்கட்டும்.
இன்னும் சற்று நேரத்தில் ஜன்னல் வழியே வரும் சூரிய கதிர் கண்மணியை எழுப்பி விடும், வெளிச்சமான நாளையை நோக்கி…
pic courtesy: http://data.whicdn.com/